Tamil Kadhal Kavithaigal தமிழ் காதல் கவிதைகள் In this article you will find love kavithai tamil, Kadhal Kavithai, Tamil Love Kavithai, Tamil Kadhal Kavithai, Love Kavithai Tamil, உயிர் காதல் கவிதைகள், Love Kavithai In Tamil, love proposal kavithai, love failure kavithai and many more shayari related to love(Pyar).
Table of Contents
Tamil Kadhal Kavithaigal
என் வாழ் நாள் தேடலிலே கிடைத்த மிகச்
சிறந்த பரிசு உன் ஞாபங்கள் மற்றும் உன் நினைவுகள் மட்டும் தான்.
உன் பார்வை பிடியில் இருந்து ஒவ்வொரு
முறையும் தப்பிக்க நினைத்து தோற்றுக் கொண்டே இருக்கின்றேன்.
எந்த நேரமும் பேசிக் கொண்டே இருப்பது மட்டும் காதல் அல்ல
புரிந்து கொண்டு பேசாமல் இருப்பதும் உண்மையான அன்பு தான்
அதை புரிந்து கொள்ளவும் ஒரு மனம் வேண்டும்.
எத்தனை உறவுகள் என் அருகில் இருந்தாலும் நீ என் அருகில்
இருக்கும் போது மனதிற்கு கிடைக்கும் அந்த ஒரு சந்தோசம்
கிடைப்பதில்லை.
அன்று உன்னை மீண்டும் பார்க்க வேண்டும்
என்று தூக்கத்தை தொலைத்தேன்.
இன்று உன் நினைவுகளுடன்
துக்கத்தை தொலைக்க முயற்சிக்கிறேன்.
ஒரு பூவாக நீ மலர்கிறாய்…
ஒரு வண்டு போல் நான் நுழைகின்றேன்…
தேன் தேடும் வண்டுகள் போல் நான் இல்லை…
நீ சம்மதம் சொல்லும் வரை.
love kavithai tamil
Tamil Kadhal Kavithaigal Images
நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை.
இவைகளை எல்லாம் அள்ளி
சூடிக்கொள்ளும் வானம் நீ…
நீ நலமா எனும்போதெல்லாம்
நீயின்றி எனக்கேது
நலம் என்கிறது மனம்…
வருவேன் என்ற எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி ஏமாற்றுகின்றாய்
மழையைபோல்…
Best Tamil Kadhal Kavithaigal 2021
காயங்களும் மாயமாகும்
என்னருகில் நீயிருந்தால்
உன் நினைவுகளை
மீட்டியே வீணை வாசிக்கவும்
கற்றுக்கொண்டேன்
நெற்றியில்
திலகமிட்டுக்கொள்ள
வரம் தந்தவனுக்கு
அன்பு பரிசாய்
அவன் நெற்றிக்கொரு
இதழில் திலகம்
Tamil காதல் கவிதைகள்
Kadhal Kavithai
ஒவ்வொரு நொடியும் கடல் கரையை
கரைத்து செல்லும் கடல் அலைகள் போல்
உன் நினைவுகள் என் கண்களை
கரைத்து சொல்லுதடி கண்ணீரில்.
நான் தேடும் முகவரி உன் இதயம் மட்டுமே.
ஆனால் நீ தரும் முகவரியோ
வலிகள் மட்டுமே.
மனதோடு மாலையாய்
எனை சூடிக்கொள்
உன் உள்ளத்தில்
உதிராத மலராய்
நானிருப்பேன்
love kavithai tamil. காதல் கவிதைகள் 2021
Tamil Love Kavithai
ஒரு விழி நீ மறு விழி
நான் இரு விழிகள் கொண்டு
அமைப்போமொரு காதல் உலகை
நாம் வசிக்க
என்றோ நாம் எதார்த்தமாய்
பேசிய வார்த்தைகளில் எல்லாம்
காதல் நிரம்பி வழியுதே
இன்று என் கண்களுன்னை
காணும் போது
உன் கண்ணாமூச்சி ஆட்டத்தில்
களைத்து போனது என் விழிகள்தான்
உனக்காய் காத்திருந்து
எந்த ஜென்மத்தில் செய்த தவமோ
இந்த ஜென்மத்தில் கிடைத்தாய்
நீயும் வரமாய் என்னவனே
விட்டு விட்டு தான் நினைக்கிறேன்…
விட்டு விட தான் நினைக்கிறேன்…
ஆனாலும் என் விரல் பிடித்தே வருகிறது…
உன் அழகான நினைவுகள்…
அழகில் ஒப்பிடும் போது உனக்கும் எனக்கும்
நீண்ட தூரம் ஆனால் இடையில் காதலை வைத்தால்
அந்த இடைவெளியே இல்லாமல் போய் விடும்.
தமிழ் காதல் கவிதைகள் sms
Love Kavithai Tamil
பெண்ணே உனக்கு என் மீது வெறுப்பு
இருக்கலாம் ஆனால் என் காதலை புரிந்தால் அந்த
வெறுப்பு உன் வாழ் நாளில் உனக்கு வராது.
ஒரு பெண் சந்தோசமாக இருக்கும் போது மிகவும்
அழகாக தோன்றுவாள் அந்த பெண்ணை சந்தோசமாக
வைத்திருக்கும் ஒரு ஆண் அவளை விட அழகாக தெரிவான்.
விரும்பும் இல்லாதவர்களை விரட்டி விரட்டி
தொந்தரவு செய்யாமல் அவர்களிடம் இருந்து ஒதுங்கி
போவதும் உண்மையான காதல் தான்.
love kavithai tamil text
மை தீட்டி வந்தவளே…!
என் மனதை களவாடி சென்றவளே…!
மதி மயங்கி நின்றவனை…!
உன் மாய விழியால் வென்றவளே…!
வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே…!
நீ இமை சிமிட்டி பேசியதால்…!
என் இளமை சிதைந்து தான் போனதடி…!
இத்தனை அழகு உன்னிடம்…!
ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்…!
விடைபெறும் போதெல்லாம்
பரிசாக்கி செல்கின்றாய்
அழகிய தருணங்களை…
மனதோடு நீ
மழையோடு நான்
நனைகின்றது நம் காதல்…!
bharathiyar kadhal kavithaigal in tamil pdf download
Tamil Kadhal Kavithai
அடைமழையில் தப்பித்து
உன் அனல் பார்வையில்
சிக்கிக்கொண்டேன்
நீ கவனிக்காமலே
கடந்து செல்வதால்
உன்மீது காதலும்
வளர்கிறது…!
பயணிப்போ ம்ஒரு பயணம்
கரம்பற்றி களைப்பாகும்
வரை காதல் தேசத்தில்…!
பூட்டி விட்டேன் இதயத்தை
எங்கேனும் தொலைத்துவிடு
திறவுகோலை மீண்டும்
தொலையாமலிருக்க
என்னிதயத்திலிருந்து
என்னவன்
உன்னை என் அருகில் வைத்து பார்த்ததை விட
என் அருகில் வைத்து பார்க்க வேண்டும்
என்று நினைத்த நாட்கள் தான் அதிகம்.
வைரம் உருவாக பல நூற்றாண்டுகள்
எடுக்கும் என்று அறிவியலார்கள் கூறுகின்றார்கள்.
அன்பே நீ மட்டும் எப்படி வெறும் பத்தே உருவனாய்.
tamil kadhal kavithaigal text copy paste
உண்மையான காதல் என்பது எந்த இடத்தில்
அன்புக்கு முன்னுரிமை குடுக்க படுகின்றதோ
அந்த இடத்தில் தான் இருக்கிறது.அந்த இடத்தில் உடல்
அழகு பின் நோக்கி தள்ளப் படுகின்றது. அது தான் உண்மையான காதல்.
எங்கு ஒளிந்து
கொண்டாலும்
உன் நினைவிடமிருந்து
தப்பிக்க முடிவதேயில்லை
உனக்கான எதிர்பார்ப்பில்
இத்தனை காதலென்றால்
விலகியே இருப்பேன்
நம் காதலுக்காக
tamil kadhal kavithaigal for wife
Tamil Love Quotes
மாலை முடிந்தும் மறையாத சூரியன் – நீ..!
என் இதயத்தின் ஒளிவட்டம் – நீ..!
நீல வானத்தை உள்ளடக்கிய நீலம் – நீ..!
செந்நிலவின் செதுக்கலற்ற சிற்பம் – நீ..!
என் இரவுகளின் துளி வெளிச்சம் – நீ..!
ஒன்னும் இல்லாத காகிதத்தை நிரப்பிய கவிதை – நீ..!
என் இதயம் என் காதல் என் வாழ்க்கை – நீ தான்..!
இதழ் என்னும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்…
பதில் நானும் தரும் முன்பே…
கனவாகி கலைந்தாய்…!
நீ நடந்த பாதைகளில் நானும் நடக்கிறேன்.
நம் காதல் தான் ஒன்று சேரவில்லை.
நம் கால் தடங்களாவது ஒன்று சேரட்டும்…!
tamil kadhal kavithaigal lyrics
மணலில் கிறுக்கியதை
அலைவந்து அழித்தாலும்
நாம் மனதில் கிறுக்கியது
மரணம்வரை அழியாது…
ஒப்பனைகள் தேவையில்லை
உன் அன்பே போதும்
என்னை அழகாக்க…
ஓசையின்றி பேசிடுவோம்
விழிமொழியில்….. ஒரு முறை
நோக்கிடுயென் பார்வையை
யார் பாதையையும்
தொடராத விழிகள்
உன் வழியை தொடருது
உன்னிதய துடிப்போடு
என்பெயரும் கலந்திட
நம் காதலும்
அழகாக மலர்ந்தது….
உன்னை நினைத்து
என்னை மறப்பதுதான்
காதலென்றால் ஆயுள் முழுதும்
வாழ்வேன் எனை மறந்து
காதல் கவிதைகள் தமிழ் வரிகள்
Love Kavithai In Tamil
நீ கட்டளையிடாமலேயே
கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன்
உன் அன்பில்
மனதில் காரிருள் சூழ்ந்தபோது
உன் அன்பெனும் ஜோதியில்
வாழ்வை ஒளிமயமாக்கினாய்
உன்னளவுக்கு அன்புகாட்ட
தெரியாவிட்டாலும்
நீ மகிழ்ச்சியாக
இருக்குமளவுக்கு
என் பாசமிருக்கும்
தமிழ் காதல் கவிதைகள் sms
தழுவிச்செல்லும்
தென்றலாய்
உன் நினைவும்
மனதை வருடிச்செல்கிறது
இடைவெளிவிட்டு
நாமிருந்தாலும்
இதயங்கள்
இணைந்தே
பயணிக்கின்றது
நீயில்லா பொழுதுகளில்
உன் நினைவும்
என் ரசணையாகிப்போனது
உயிர் காதல் கவிதைகள் text
என் கவலைகளுக்கு
நீ மருந்தாகின்றாய்
உன் கவலைகளை
மறைத்து
மௌன கவிதை நீ
ரசிக்கும் ரசிகை நான்
நீ பேசாத போது
பேசி மகிழ்கிறேன்
நீ பேசிய வார்த்தைகளோடு
மனதுக்குள்
Kadhal Kavithaigal Free Images
உலகம் சுழல்வது
நின்றாலும்
உன் நினைவு
என்னுள் சுழல்வது
நிற்காது அன்பே
தோஷங்கள்
இல்லாத போதும்
பரிகாரங்கள் செய்கிறேன்
நம் காதலின்
சந்தோஷத்திற்காக
உன் முந்தானையில்
ஒரு முகக்கவசம் கொடு.
ஆயுள் முழுவதும் ஆக்ஸிஜன்
இன்றி வாழ்கிறேன் உன்னுடன் நான்.
காதல் கவிதைகள்
அழகிய பொம்மை என நினைத்து
கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன்.
நீ கண் சிமிட்டிய நொடியில்
கண் சிமிட்டா பொம்மையானேன் நான்…!
நிழலே வீழும் இருளாயினும்.
நீ என்ற ஒற்றை நம்பிக்கையில்
கை வீசி முன் நகர்கின்றேன்.
உடன் வருகிறாய் தானே…?
விடியலுக்கும் விழித்தலுக்கும்
இடையே உள்ள நேரத்தையெல்லாம்
ஆக்கிரமிப்பு செய்து கொள்(ல்)கின்றன
உன் நினைவுகள்டா…
உனக்கான இதயம்
உன்னை ஒருபோதும் மறக்காது
அப்படி மறந்தால் அது
உனக்கான இதயமாக இருக்காது…!
உனக்கும் எனக்குமான அதிகபட்ச
எல்லைகளெல்லாம் தாண்டிவிட்டேன்.
இதற்கு மேல் பொறுமையில்லை
ஏதாவது ஒன்று சொல்.
பொறுப்பதா? இருப்பதா? இறப்பதா?
நினைவுகள் பல சுமக்கும் இதயம்.
கனவுகள் பல காணும் மனது..
நீங்காமல் அலை மோதும் நினைவு…
உயிர் பிரிந்தாலும் பிரியாது உன் நினைவு…!
tamil kadhal kavithaigal sms
உன்னை உண்மையாக நேசித்த
இதயத்தை விட்டு பிரிந்து விடாதே.
எத்தனை இதயங்கள் உன்னை நேசித்தாலும்.
அந்த ஒரு இதயம் போல் ஆகாது.
உன்னை சிறைபிடிக்க நினைத்து
நான் கைதி ஆனேன்
உன்னிடம்.
உன் காதல் கொடுத்த மயக்கத்தில்
நான் உளறுகிறேன்…!
கேட்பவர்கள் அதனை கவிதை என்கிறார்கள்.
தமிழ் sms கவிதைகள் lyrics
உன் அருகாமை போதும்
தாய்மடியாய்
நினைத்து நானுறங்க
தனிமையும் பிடித்துப்போனது
என்னுடன் உன் நினைவுகளும்
வந்துவிடுவதால்
தொலைவில் உன் குரல்
கேட்டாலும் மனமேனோ
பறக்கின்றது பட்டாம்பூச்சாய்
தமிழ் காதல் கவிதைகள் sms
ஆறுதல் கூற
ஆயிரம்பேரிருந்தாலும்
உன் அருகாமையைபோலாகுமா
இருவரி கவிதையொன்று
இணைந்து எழுதிடுவோம்
இதழ்களிலே
விழி திறக்கும்வரை
காத்திருக்குறான்
வண்ணக்கனவுகளோடு
வண்ணத்துப்பூச்சியாக
வானில் சேர்ந்துப்பறந்து
ரசித்து மகிழ்ந்திட
tamil kadhal kavithaigal quotes text copy paste
காதல் கவிதை
உன்னால் என் நொடிகள்
ஒவ்வொன்றும் அழகானதே
எனக்கு பிடித்ததையெல்லாம்
நீ ரசிப்பதால் உனக்கு
பிடிக்காததையெல்லாம்
நான் தவிர்க்கிறேன்
நீ மூச்சி காற்றுப்படும்
தூரத்திலிருந்தால் நான் காற்றில்லா
தேசத்திலும் உயிர் வாழ்வேன்…
love kavithai tamil lyrics
துன்பக்கடலில்
தத்தளித்த போது
துடுப்பாயிருந்து
கரை சேர்த்தாய்
மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர வைத்தாய் நீ…
விடுவித்து விடாதே
உன் விழிகளிலிருந்து
ஒளியிழந்திடுமே
என் விழிகளும்…
tamil kadhal kavithaigal text
தொலைதூரம் நீ போனால்
உன்னை தேடி வெகுதூரம் பயணிக்குறது
உள்ளம்..
காதல் பிடிக்குள் சிக்கி காற்றும்
திணறுகிறது கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப்போகட்டும்…
உன்னருகில் உன் நினைவில
மட்டுமே என் மகிழ்ச்சியெல்லாம்…
tamil kadhal kavithaigal by vairamuthu
கற்பனையிலிருந்தவன் கண்ணெதிரே
தோன்றவும் சொப்பனமோ
என்றெண்ணியது மனம்…
என்னை துளைத்தெடுக்கும்
உன் நினைவுகளைவிடவா
இவ்வுலகிலோர்
கூர்மையான
ஆயுதமிருக்கபோகிறது
ஏதேதோயெழுத நினைத்து
உன் பெயரை எழுதிமுடித்தேன்
கவிதையாக
vairamuthu kadhal kavithai lyrics
தமிழ் காதல் கவிதைகள்
நாம் இமைக்காமல்
பார்த்துக்கொண்ட
நொடிகளில்
நம் இதயங்களும்
இடம்மாறிக்கொண்டது
சாலையோர நடைப்பயிற்சியில்
காலைநேர தென்றலாய் நீ…
மௌனமாக பேசிட
உன்னிதழ் மயங்கித்தான்
போனது என் மனம்…
லவ் கவிதை தமிழ்
விடுதலையில்லா சட்டம்
வேண்டும் உன் காதல்
பிடிக்குள் அகபட்டுக்கிடக்க…!
என் உறக்கத்தை
இரையாக்கி கொள்கிறது
உன் நினைவு…!
காற்றோடு கலந்து வரும்
உன் நினைவுச்சாரலில்
நனைகின்றேன் நானும்…
தென்றல் காதல் கவிதை
கவிதையெழுத
சிந்தித்தால்
சிந்தைக்குள்
நீ வந்துவிடுகிறாய்
கவிதையாக…
பேச நினைத்த
வார்த்தைகளும்
தூரமானது உன்னருகில்
இன்னிசையாக
இதயத்துடிப்பும்
உனை காணும்
போதெல்லாம்…
(ஆனந்த யாழாய்)
காதல் கவிதைகள் 2020
இளைப்பாற இடம் கேட்டேன்
இதயத்தில் இணைந்து வாழும்
வரம் கொடுத்தான்…
மொத்த கவலைகளும்
கலைந்துப்போகிறது
உன் நினைவு
தென்றலாய் தீண்ட
சுழற்றும்
சூறாவளியிலும்
நிலையாக
நிற்கும் நான் உன்
நினைவுத்தீண்டலில்
தடுமாறிப்போகின்றேன்
தமிழ் காதல் கவிதைகள் sms
விட்டுச்சென்ற
இடத்திலேயே
நிலைத்துவிட்டேன்
உன் நினைவுகளிலிருந்து
விடுபடமுடியாமல்…
நாணலும் நாணம் கொண்டு
தலைசாய்ந்தது உன் காதல்
மொழியில்
நீ எழுதாதபோதும்
பல கவிதைகள்
ரசிக்கின்றேன்
உன் விழிகள்
காதல் கவிதைகள் தமிழ் வரிகள்
ஒரு இதயம்
போதாது
நீ
தந்த வலிகளை
சுமக்க..!
இரண்டு விழிகள்
பத்தாது அதை நினைத்து
கண்ணீர் வடிக்க…
அன்பே நீ எனக்காக பிறக்க வில்லை
உன் நினைவுகள் தான் எனக்காக பிறந்தவை…
நீ பிரிந்தும் உன் நினைவுகள்
என்னை விட்டு பிரியாமல் இருக்கிறது..
ஞாபகங்கள்
அழிக்கப்படுவதில்லை
பிரிந்தப் பின் தான்
ஆழமாக
விதைக்கப்படுகின்றன…
அழகே
விடிந்தும்
விடியாத
பொழுது
போல உந்தன்
நினைவுகள்
மறைந்தும் மறையாமல்…
உன் கைபிடிக்கும் பாக்கியம்
கிடைக்க வில்லை எனக்கு இருந்தும்
தினம் உன் கைகோர்த்து
உலவுகிறேன் கனவில்
உன்னால் என்றுமே திருப்பித்தர முடியாத ஒன்று
உன்னுள் தொலைத்த என் நியாபகங்கள்…!!!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உன் நினைவுகள் என்னை தொடும் பொழுது
நான் என்னை மறந்து விடுகிறேன்
எங்கு ஒழிந்து கொண்டாலும்
உன் நினைவுகளிடம் இருந்து
தப்பிக்க முடிவதே இல்லை
தினம் இதயத்தில் ரணமாய்
சலிக்காத ரசணைகள்
தூரத்து நிலவும்
அருகில் நீயும்…!
உன் நினைவில்
என் நொடிகளும்
கரைந்துக் கொண்டிருக்கு…
ஊடலும்
தேவை என்னில்
உன்னை தேட
தமிழ் காதல் கவிதைகள் sms
ஞாபகங்கள் அழிக்கப்படுவதில்லை
பிரிந்தப் பின் தான்
ஆழமாக விதைக்கப்படுகின்றன…
இரவில் நிலவின் துணையோடு
உன் கைகோர்த்து நடந்த நினைவுகள்
இன்றும் என் மனதை கனமாக்கி
இதயத்தை ரனமாக்குகிறது
என்ன செய்கிறேன் என்று
புரிவதில்லை பல நேரம்
இருந்தும் அழகாக போகிறது நாட்கள்
உன் நினைவுகள் என்னோடு இருப்பதால்
கலைந்த கனவுகளை
சேர்த்து கோர்த்து
ரசிக்கின்றேன்
வந்தது நீயல்லவா
கண்களுக்குள்
உன்னை
நினைக்கும் போது
எந்த கஷ்டமும்
தெரியவில்லை
உன்னை
மறக்க நினைக்கும்
போது தான்
அதன் கஷ்டம்
தெரிகின்றது
குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்…
பார்த்தநொடியே
கண்களுக்குள்
ஓவியமானாய்
காத்திருக்கு
விழிகளும்
உன்னுடன் சேர்ந்து
காவியம் பாட
எழுத்துப்பிழைகள் அடங்கிய
என் அழகிய
கவிதை நீ…..!!
காற்றிலே ஆடும்
காகிதம் நான்
நீதான் என்னை
கடிதம் ஆக்கினாய்..!!
நாம் இருவர்
காதலின் ஆழம்பற்றி..!!
இணையும் விரல்கள்
நிறைய பேசட்டும்…!
ஆயிரம் இன்னல்கள் வந்தாலும்
மீண்டும் ஒரு ஜென்மத்தில்
உன்னை நான்
காதல் செய்திடுவேன்…!
போகும்பாதை
எதுவானாலும்
வாழும் காலம் முழுதும்
உன்னோடுதான்…!!
வார்த்தை போதாத நேரங்களில்
முத்தங்களும்..!!
முத்தங்கள் தீரும் நேரங்களில்
அணைப்புகளும்..!!
எல்லாம் தீர்ந்த பிறகும் உன்
ஒரு பார்வை போதும்..!!
இந்த பெருங்காதல் வாழ..
கணவன் மனைவி இடையில்
தீராக் காதலை போல
மாறாத நட்பும் இருந்தால்
இல்லறம் என்றும் இனிக்கும்..!!
நெற்றியில்,
என் விதியை
எழுதிய ஆண்டவன்
தன்னை மறந்து
தவறாய் எழுதிய
அழகிய பிழைதான்
நமது ஆழமான காதல்…!
சுண்டுவிரல் பிடித்து
ஒரு ஒத்தையடி பாதையில்
நடை பழகச் சொல்லிக்கொடு
உன்னால் தான்
நான் என் பெண்மையை
அடையபோகிறேன்….!
உன்னை மட்டும் காதலிக்க
தெரிந்த எனக்கு” !
உன்னை எவ்வாறு
காதலிக்க வேண்டும்
எனத் தெரியவில்லை..!!
உளறுகிறேனட…
கதிரவன் மறையும் பொழுதில்
கண் உறங்கும் வேளையில்
கனவில் கள்வா
உன் காட்சித் தருகையால்..!!
ஜாதியை ஒழிக்க,
வீட்டிற்கு ஒரு
காதல் வளர்ப்போம்….!!!
கண்ணீரை சுமக்கின்ற
கண்களுக்கு தான் தெரியும்
உன்னை கண்ணாமல் இருப்பது
எவ்வளவு வலி என்று..!!
உன் மார்போது
நீ என்னை
அனைக்கும் போது
நான் உணர்ந்தது
காம உணர்வை அல்ல..!!
அளவுகடந்த உந்தன்
காதலையும்..!! பாதுகாப்பையும்..!!
மாமா அத்தான்
என்றெல்லாம் ஆயிரம் முறை
அழைக்கிறேன் உன்னை…!!
ஏனோ உன் பெயரைச்சொல்லி
அழைக்கச் சொன்னால் மட்டும்
ஒரு வெட்கம் வந்து ஒட்டிக்கொள்கிறது…!!
காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்
என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
நீ என்னிடம் மட்டும் பேச வேண்டும் என்று நினைத்தேன்
அது என்னுடைய அன்பு அப்பொழுது தெரியவில்லை அது
உன்னுடைய சுதந்திரம் என்று புரிந்தும்
உனக்கு தெரியவில்லை அது என்னுடைய அன்பு என்று.
உன் கரம் பிடிக்க ஏங்கினேன் ஒரு முறை அல்ல எல்லா
நேரங்களிலும் எல்லா காலங்களிலும்
எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா வயதிலும்.
யாரென்று தெரியாதவர்களுக்கு கிடைக்கும் அன்பு கூட
முன்பு காதலித்து அவர்களுக்கு
கிடைப்பதில்லை இதுதான் காதலின் ஆழம்.
உன்னை கண்டும் காணாமல் செல்கிறேன்
ஆனால் உன் மனதிற்கு நடிக்கத்
தெரியவில்லை வலிக்கின்றது.
நான் உன்னை வெறுத்து போல நடிக்கிறேன்
ஆனால் என் மனதிற்கு நடிக்கத் தெரியவில்லை
நீ என்னை வெறுத்தாலும் உன்னை நான்
ரசிக்கிறேன் உன் கண்ணில் காதல் தெரிவதால்.
சிப்பி நான் முத்து நீ கடலாய் நம்
காதல் விழி நீ மொழி நான் மௌனமாய் நம் உரையாடல்.
Romantic love quotes in tamil
குடை பிடித்தும் நனைந்துவிட்டது
அவள் இதழுலுக்குள் என் இதழ்கள்.
என் கூட்டில் உன் சூட்டின் கதகதப்பும்
என்னாளும் வாழ்ந்திடவே நினைக்கிறேன்.
உன் மூச்சுக்காற்று பட்ட இடமெல்லாம்
அனலாய் கொதிக்கிறது உன் சீண்டலும்
தீண்டலும் இன்றி அணையாமல்.
கொடுப்பதை விட வாங்குவதே மிக
மகிழ்ச்சி கூடியது அன்பாக இருந்தாலும்
சரி மொத்தமாக இருந்தாலும் சரி.
எட்டி நின்று நீ பார்க்கும் போதெல்லாம்
கிட்டவந்து கொஞ்ச சொல்கிறது உன் அழகு.
அன்பே உன் வெட்கத்தை ரசிப்பதற்காகவே
உன்னை சீண்டிப் பார்க்கத் தோன்றுகிறது.
நீ தந்த காயங்கள் எனக்கு வலிக்கவில்லை
மாறாய் தித்திக்கிறது இதழ்களில் விழுந்ததால்.
பசியே எடுப்பதில்லை நீ அருகில்
இருந்தால் பசி அடங்குவதில்லை.
உன்னை ரசிக்கும் போது துளித்துளியாய்
தேனீர் சுவைக்கும் ஜென் துறவியின்
மனநிலையை உணர்கிறேன்.
உறக்கம் கலைந்து விழிக்கும் போது நீ உறங்கும்
அழகை பார்த்து ரசிப்பதற்காகவே பின் தூங்கி
முன் எழுந்த நாட்களின் நினைவுகளை
போதையுடன் மடித்து வைத்து எழுகிறேன்.
கொடுக்கத் தவறிய முத்தம் ஒன்று
கூட்டி கொண்டு இருக்கிறது தனது
வட்டி கணக்கை.
உதட்டு சாயத்தை கலைத்த அவனே
அதை மீண்டும் முத்தத்தால் மீட்டு தா.
நான் அன்பை எவரிடத்தில் வேண்டுமானாலும் பகிர்ந்து
கொள்ளலாம் ஆனால் காதலி
ஒருவரிடத்தில் மட்டும் தான் பகிர முடியும்.
எதையும் எதிர்க்கும் என் மனது நீ ஒரு
நிமிடம் பேசாமல் இருப்பதை
எதிர்கொள்ள முடியவில்லை.
உன் மனதை அறிய ஆசைப்பட்டேன் ஆனால் என்
மனதை மற்றவர்கள் புரிந்து கொண்டனர்
மற்றவர்களிடம் ஆறுதல் கேட்டதால்.
குரு குரு பார்வை அப்படி என்னை
பார்க்காதே மறுபடியும் என் குறும்புத்தனங்கள்
முதலில் இருந்து தொடங்கி விடும்.
tamil kadhal kavithaigal pdf
What is the best quote for love in Tamil?
அன்பு என்பது உங்கள் சொந்த வாழ்க்கைக்கு மற்றொரு நபரின் மகிழ்ச்சி இன்றியமையாத ஒரு நிலை.
Love is that condition in which the happiness of another person is essential to your own.
What is the most romantic quote ever in Tamil?
உலகிற்கு நீங்கள் ஒரு நபராக இருக்கலாம், ஆனால் ஒருவருக்கு நீங்கள் தான் உலகம்.
To the world you may be one person, but to one person you are the world.